அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் பல்கலையில் "நன்றி நவிலும் நாள் விழா"

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் பல்கலையில் உள்ள திருச்சிற்றம்பலக் கலையரங்கில் "நன்றி நவிலும் நாள் விழா" நடைபெற்றது. இதில், போசிரியல் பார்வதி வரவேற்புரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்து, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் பல்கலை உயர்கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் பிரேமாவதி விஜயன் 2016-17 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும், சாதனைகள் குறித்தும் ஆய்வறிக்கையினை வாசித்தார். 

தொடர்ந்து, வேந்தர் ப.ரா.கிருஷ்ணகுமார் தலைமையுரை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் கல்வி முன்னேற்றத்திற்காக அவினாசிலிங்கம் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. மாணவியர்கள் தங்களது படிப்பு மற்றும் திறமைகளை வெளிக்கொணர காரணமாக இருக்கிற ஆசிரியர்களின் சேவையை உணர்ந்து செயலாற்ற வேண்டும்' என கூறினார்.

இதையடுத்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி தலைவர் மருத்துவர் எஸ்.ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், இப்பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகைபுரிந்ததற்கு தான் பெருமை அடைகிறேன். அன்பும் மரியாதையுடன் கலந்த ஒரு கல்வியை கற்பித்து கொண்டிருக்கிற ஒரு கல்வி நிறுவனமாக அவினாசிலிங்கம் பல்கலைக் கழகம் திகழ்கிறது. மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் திறமையை அறிந்து கொண்டு கல்விகற்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் மனம் தளராமல் செயல்பட வேண்டும். தங்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொண்டால் அதன் பயன் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரும். 

பல்வேறு அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை படிக்கும் பழக்கம் வளர வேண்டும். தங்களால் முடிந்த  வரை மக்களுக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதனைத்தொடர்ந்து, இளங்களை மற்றும் முதுகலை பயிலும் மாணவியர்கள், தொழில்நுட்பக் கல்வி, ஆசிரியர் பயிற்சிக் கல்வி, உடற்பயிற்சிக் கல்வித் துறையிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 250 மாணவியர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவாக விலங்கியல் துறை பேராசிரியர் கே.எஸ்.சாந்தி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...